அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் வாலிபர் பணிக்குழுவின் ஏற்பாட்டில் மார்ச் மாதம் 28, 29, 30 ஆம் திகதிகளில் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள தூய அந்திரேயா ஆலயம், பெரிய நீலாவணைத் திருச்சபையில் ஆன்மீகம் தொடர்பான பல கருத்தமர்வுகள், பயிற்சி பட்டறைகள், மற்றும் தனிப்பட்ட தியானங்கள் உள்ளடங்கிய “வாலிபர்; பாசறை” இறை விழுமியத்தின் அடிப்படையில் சிறப்புற நடைபெற்றது.
அனைத்துப் பிராந்தியங்கள் இணைந்து 68 வாலிபர்கள் உள்ளடங்கிய இவ் வாலிபர் பாசறையில் வளவாளர்களாக அருட்பணி. எம். ஜெயானந்தராசா, அருட்பணி. எஸ். ஜோன் புவியரசன், அருட்பணி. எஸ். சிவானந்தரூபன், திரு. ரஞ்சித் Ms. சந்திரிகா மற்றும் திரு. ஏ. தேவானந் அவர்களும் சிறப்புற வாலிபர்களை கற்கைநெறி வழியாக கொண்டு நடத்தியதோடு மேலும் விளையாட்டுகளுடன் இணைந்த ஐக்கியத்தின் வாயிலாக திரு. ஜே. கலிங்டஸ் அவர்களும் நிர்வாக ஒருங்கிணைப்பு வாயிலாக திரு. ஆர். சுஜந்தன் அவர்களும் நேர்த்தியாகப் பாசறையை பூரணப்படுத்தினர்.
மேலும் தவக்காலத்தையொட்டி ஆன்மீக கண்;ணோட்டத்தில் நடைபெற்ற இப்பாசறையில் சுமார் 50 வீதமானோர் புதுமுக வாலிபர்களாக சமூகமளித்தமையைத் தாண்டி அனைத்து வாலிபர்களும் தங்கள் வாழ்வில் ஆண்டவர் வழியாக உடன்படிக்கைக்குரியவர்களாக மாறினர்.
இறுதியாக பிராந்தியங்களிலிருந்து கலந்து கொண்ட அனைத்து வாலிபர்களுக்கும் பெரியநீலாவணைத் திருச்சபை குடும்பத்தினருக்கும், பெலப்படுத்தி நடாத்தக் கிருபை கொடுத்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துக்கும் அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை வாலிபர் இணைப்பாளர் அருட்பணி. எம். ஜெயானந்தராஜா அவர்கள் நன்றிகள் கூறி ஓர் முழுமையான ஆன்மீக பாசறையாக நிறைவு செய்தார். இந் நிகழ்வை சிறப்புற நாடத்தி முடிதமைக்காக ஏற்பாட்டுக் குழுவினருக்கு அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் பாராட்டுக்கள்.